அபிராமம் டி - 15 கிரிக்கெட் மேட்ச் நினைவலைகள் ...!!!!

 அபிராமம் டி - 15 கிரிக்கெட் மேட்ச் நினைவலைகள் ...!!!!

.
.
.




அன்று "சாபென்ன பே பே சிக்ஸ்" என்றும் "சாட் பூட் த்ரீ" என்றும் கைகளை நீட்டி செவுச்சு கிட்டி,பம்பரம்,கம்பு தள்ளி,ஆபிதம்,மணியாபிதம்,எஸ்சார் இடி எஸ்சார் ஒதை,பெந்தா,சீச்சுக்கல்லு, தாப்புலாங்குச்சி,ஒண்ணாங்குலி, இம்புட்டு பணம் தாரேன் உடுடா துலுக்கா,என சீசனுக்கு அம்புட்டு வெளாட்டு வெளான்டாலும் இந்த கிரிக்கெட் மட்டும் எங்களை மகுடியில் மயங்கிய பாம்புகளாய் கட்டிப்போட்டது என்பது உண்மைதான்..
.



.மீராலி முஜீப் வீட்டில் வால்வு செட் ரேடியோவில் கிரிக்கெட் கமாண்டெரி கேட்கும் போது ஏக்,தோ,தீன்,சார்,பாஞ்ச்,சேர்,சாத்,ஆட்,நவ்,தஸ்,கியாரா,பாரா,தேரா இந்த நம்பர்களைக் கவனித்து குறித்து குத்துமதிப்பா ஸ்கோர் அறிந்த ஆர்வம் இன்று ஹெச்டி, 4கே டீவில ஸ்கோர் துல்லியமா பார்க்கும்போது வரவில்லை..
.
.ஊரில் மூன்று வீடுகளில் மட்டும் டீ.வி இருக்கும்..அதுவும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மேட்ச் அதிகாலை 2.30க்கு தொடங்கும்.அதை அந்த மூன்று வீட்டாரையும் கெஞ்சிக் கூத்தாடி வாசலில் ,ஜன்னலில் நின்று முழு மேட்சையும் பார்ப்போம்..
.
எல்லோரும் இந்தியா செயிக்க ஆசப்படும்போது ஒத்த மயன் நாகூர் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பேசுவியான்..அதுனால அவன செல்லையிலேயே சாத்தி ஓரமா நிப்பாட்டிருவம்..அவன் தனியா டூஜான்,கஸ் லோகி ,ரிச்சர்ட்ஸ் ,க்ளைவ் லாய்ட்,மால்கம் மார்சல் எனக் கூவிக்கிட்டே ஓரமா நிப்பாய்ன்...
.
.
.ரஜினி , கமல் காம்பினேசன் மாறி எங்களுக்குள் கவாஸ்கர் ,ஸ்ரீகாந்த் ரசிகர்கள்..ஓன் ஆளு அவுட்டு..இப்ப எங்க ஸ்ரீகாந்த் வெளுவ கவனி என்று சுவராசியமா போவும் மேட்ச்சு வியூகங்கள்....
.
.
.
மிசின்கார ரோடுதான் எங்களுக்கு சேப்பாக்கம் , சந்தைக்கடை ரோடே ஈடன் கார்டன்,சைக்கிள் ட்யூப்பை நறுக்கி தாளைப் பந்தாக உருட்டி சுத்தி சுத்தி ட்யூப்பை மாட்டி பந்து ரெடியான செய்தியை அலாவுதீன் (ஊதி ) சொன்னதுதான் பாக்கி மேட்ச் ஆரம்பிச்சிடும்..ட்யூப் உருவி உழுந்தா எடுத்துக் குடுக்க ஒரு பொடுசு தெர்டுமேனா நிக்கும்....
.
.
.
.கொக்க முட்டாய் கப்,கல்லமுட்டாய் கப் , 5 ரூவா கப் என கோழி கூவுனவொன்ன ஆரம்பிச்ச டோர்னமென்ட் எவனாவது ஏழ்ரைய கூட்டுற வரைக்கிம் அது பாட்டுக்கு நடக்கும்..ஏழ்ரையில ரப்பர் கார்க் பந்து துண்டு துண்டா கடித்துத் துப்பப்பட்டு முள்ளுக் காட்டுக்குள்ளாக்க எறியப்படும்..
.
.
.இப்படி பயணித்த அம்ம கிரிக்கெட்டு ஐஸ்கூலில் வெளாட ஆரம்பிச்ச போது தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டது...கைலி உடுத்தி வெளாடக்கூடாது..பேன்ட்,ட்ராயர் மட்டும் அணியவேண்டும்..என்று நிறம் மாறிக்கொண்டது…(கைலியை பேண்ட் மாறி கட்டி காதர்மைதீன் சாரிடம் டிக்கியில் டின் கட்டியவர்கள் ரெம்ப பேரு...அம்மளுந்தேய்ன்...)
.
.
.







.சைக்கிள் டியூப் பந்து , விக்கி பாலாகவும்,ரப்பர் கார்க் பாலாகவும் உருமாறியது...மரக்கட்டை பேட்டுகள் ரன்னர் பேட்டாகிப் போனது..ஒரே ஒரு புது பேட் மட்டும் இங்கும் அங்கும் பேட் சேஞ்ச் என்ற விளிப்பில் மாறும்..
.
.
.
.அந்த சமயம் அபிராமம் டவுன் டீம் என்ற அணியை மரியாதைக்குரிய அலியப்பா சேக் அண்ணன்,பூபதி அண்ணன்,நத்தம் தாஸ் மாமா மயன் முத்துக்குமார் அண்ணன்,அவரின் தம்பி,உறவினர் ராஜா,பன்னீர் அண்ணன்,ரமேஷ் பாபு அண்ணன்,சேமாது சிக்கந்தர் அண்ணன் நெய்னாரப்பா பேரன் மீரா,,மாப்ள கலைவாணன்,முத்து ஜாகிர்,சகுபர்,ஜெய்சங்கர் ஆகியோர் உருவாக்கினர்.முறைப்படி , விதிப்படி ஆடும் ஆட்டத்தை எங்களுக்கு காட்டினர்.. இது தான் அபிராமத்தின் முதல் கவுன்ட்டி கிரிக்கெட் டீம்...
.
.
.எங்கள் ஆர்வத்தைக் கண்ணுற்ற "கிப்ஸ்" மார்க் குழுமத்தினர் ஒரு டோர்ணமென்ட் நடத்தினர்..பல ஊர்களில் இருந்து அணியினர் அழைக்கப்பட்டனர்,,குறிப்பாக மதுரை "டி.வி.எஸ் அணி , மதுரை ப்ரீக் அணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை..
.
.
பச்சை மேட் விரிக்கப்பட்டு டோர்ணமென்ட் கோலாகலமாக நடந்தது...கமுதி பொன்னையன் சிக்கந்தர் மற்றும் மீரா பௌலிங் ஸ்பீடுகள் ஆச்சர்யமாகப் பேசப்பட்டன.முத்து ஜாகிர்,சகுபரின் பச்சை நிற ஹெல்மெட் மற்றும் பேடு செட்ஸ் வியக்க வைத்தது.. டிரிங்ஸ் ப்ரேக் விட்டு தட்டுல நன்னாரி சர்வத்தை கொண்டுவந்து குடுப்பாக...அதுனால டிரிங்ஸ் பிரேக் அப்ப கிரவுண்டுல நின்டா சர்வத்து கெடைக்கிம்ட்டு அப்ப பேட்டிங் எறங்க அம்ம சாதி சனங்க ரெம்ப ஆசைப்படுவம்....
,
.அம்பயர்கள் வேலுச்சாமி சாரும் , நண்பன் ஷேக் ஹமீதும் அசத்தினார்கள்...
.
.நத்தம் டீம் என்.சி.சி என்ற பெயரில் களமிறங்கியது. நான் லெப்ட் ஆம் பௌலர்...ஒரு மேட்சுல 4 விக்கெட் எடுத்தேன்..அப்ப அம்பயரா நின்ற வேலுச்சாமி சார்.."பீ.டி பிருடுல கிரவுண்டு பக்கமே தலை காட்டாதவய்ங்கெல்லாம் நல்லா வெளாடுறாய்ங்கடா..." அப்டின்டு சொன்னார்...அம்ம புதுப் பொண்ணு மாறி வெக்கப்பட்டம்.....புதூர் டீம் ,அகத்தாரிருப்பு டீம் என மேட்ச் களை கட்டும்..சில வேளைகளில் இரண்டு டீம்கள் ஒன்றாக மாறி அயலூர் டீமிடம் விளையாடும்..
.
.
.அபிராமம் , நத்தம் மற்றும் சுற்றுப்பட்டு ஊர்மக்களும் ஐஸ்கூலில் ஒன்று கூடி கண்டுகளித்து வீரர்களை உற்சாகப் படுத்துவர்.. பக்கத்துல குடத்துல தண்ணி இருக்கும் ( தண்ணி தவிக்கும்ல..)
.
.யார் பைனலில் கப் வாங்கினாலும் கொண்டாடி மகிழ்விப்போம்..அந்த கப்பை வெற்றி பெற்ற அணி கிப்ஸ் யூனுஸ் அண்ணன் , யூசுப் கான் அண்ணன் மற்றும் அக்பர் அண்ணன் கைகளில் இருந்து பெறும்போது நாங்கள் பெறுவது போல் பூரிப்பு அடைவோம்...
.
.ஒரு தடவை அபிராமம் நத்தம் உசுப்பு ஏத்திங் பார்முலாவ ஊஸ் பண்ணி மகாராஜா ஜுனைது அண்ணனை நாமல்லாம் டோர்ணமென்ட் நடத்த முடியுமாண்ணே அப்டின்னு ஏத்தி விட்டு அவர் ஒடனே ,நடத்திக்காட்டுவோம் மேன்...என்று ஒயிட் அண்டு ஒயிட்டில் கிரவுண்டில் இறங்கி நின்று முழு டோர்ணமென்ட்டை நடத்திக்கொடுத்து அனைவர் உள்ளங்களிலும் இடம் பிடித்தார்...நல்ல மனிதர்...
.
.
இப்படி நாங்கள் பயணித்த கிரிக்கெட் பயணம் இன்று மேட்ச் டீ.வில பார்ப்பதோடு நின்றுவிட்டது...கண்டிப்பாக அது போல் டோர்ணமென்டுகள் இனியும் நடக்க வேண்டும்...இன்பத்தில் களிக்க வேண்டும்...
.
.நீதி : எந்திர வாழ்வை சுந்தர வாழ்வாய் மாற்ற இது போன்ற நினைவூட்டல்கள் காலத்தின் கட்டாயம்...!!!
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive