பேட்டை அண்ணன் மற்றும் லொள்ளு மாமு..

MUSLIM WELFARE ASSOCIATION NATHAM


அன்று காக்கி ட்ரவுசரை உடுத்திக் கொண்டு அல்லது
கைலியை கையில் பிடித்துக் கொண்டு(கட்டக்கூடாது)
கல்மண்டபத்திற்கு வந்தால் அங்கு பேட்டை அண்ணன்
ரெடியாக இருப்பார்.அவரிடம் 6 வயசு பொடுசு ' என்ன
மம்மது மைதீன் சாப்ட்டயா? என்று கேட்கும்'
உடனே அவர் எவய்ன் அவய்ன் புத்தி இருக்கா மதி
இருக்கா? என்பார்.நாமெல்லாம் சின்ன கிளாசில் டீ
குடிப்போம் ஆனால் பேட்டை அண்ணன் பெரிய
சட்டியில் தான் டீ குடிப்பார்.அவருக்கு ஞாயிறு முதல்
சனி வரை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சோறு வரும்.
அதை லுஹரில் ஆரம்பித்து அஸர் வரை சாப்பிடுவார்.
அடுத்து அடுத்தநாள் டீதான்.
அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்

எந்த மடப்பய? , பேதில்ல போயிருவ, கொல்லையில போயிருவ,
அரிசிப்பல்லு அவுசாரி, தெத்துப்பல்லு தே.........யா, லொங்காரிச்
சிருக்கி மயன், குச்சிக்காலி மயன், குல்லி மயன், சமுக்காரம்(சோப்பு)
மடார்னு உளுந்திருவ, திடீர்னு உளுந்திருவ, ஞாயத்துக் கெளம
ஒன்னு மைதினாண்டவுகளே நீங்க கேளுங்க, கடைசியா
முடியாத பட்சத்தில அவர் "கொல்றான்" "கொல்றான்" என்று
மூச்சு விடாமல் கத்துவார்.
உடனே அவரை விட்டு விலகிய குழு லொள்ளு
மாமுவிடம் 'வெள்ளக்கோழி வெள்ளமுட்ட விட்டா கருப்புக் கோழி
என்ன முட்ட விடும்?னு அறிவியல்பூர்வமான கேள்விய கேட்கும்.
அதற்கு அவர் நொப்பன் முட்ட விடும் என்பார்.
இவை அன்றைய கோணத்தில் சிரிப்பாக
இருந்தாலும் இன்று நினைத்தால் மனம் கனக்கிறது.அவர்களிடம்
வாங்கிய திட்டுக்களுக்கு பிரயாச்சித்தமாக ஏதாவது செய்ய
வேண்டும் என்று நாம் நினைத்தால் அவர்களுடைய மறுமைக்கு துவா
செய்வோம்!!
MUSLIM WELFARE ASSOCIATION

சங்கத்து பிள்ளைகள்


முஸ்லீம் பொது நல ஊழியர் மன்றம் என்ற மாபெரும் அமைப்பை நமது முன்னோர்
உருவாக்கினர். அதன் முக்கிய பணியாக ரமலான் இரவுகளில் ஷஹர் நேரத்தில்
நத்தம் வீதிகளில் பைத் ஓதி மக்களை விழித்தெழ வைப்பது,கல்யாணம் நடைபெறும்
போது மாப்பிள்ளையை பைத் ஓதி மணப் பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வது,ஊரில்
நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதனைச் சிறப்பித்தல்
போன்றவை ஆகும். பாரம்பரியம் மிக்க இம்மன்றத்தின் அனுபவங்களை மற்ற
வாரங்களில் பார்ப்போம்!........

சங்கத்து பிள்ளைகள்

சங்கத்துப் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை வீட்டில் பெருத்த வரவேற்பு
இருக்கும்.சங்கத்து புள்ளைக வந்துட்டாகளா? சங்கத்து மாலை ஏறினா
தான் மத்த மாலை ஏறனும் என்று ஏகத்துக்கு மரியாதைதான்.
மாப்பிள்ளை சோவடிப்பு,பைத் பாடி பொண்ணு வீட்டுக்கு அழைத்து
வருவது பொண் வீட்டில் பத்து நிமிசம் சோபனப்பாடல் பாடுதல்
என சோர்வான புள்ளைகளுக்கு அடுத்த நாள் செம்ம அதிர்ஷ்டம்.
ஆம்! மாப்பிள்ளை சாப்பாடு.

வசதிக்கேற்ப மாப்பிள்ளைத் தோழர்களை 11, 21 31, 41, 51,
என அழைத்து மாப்பிள்ளையுடன் சேர்த்து அளிக்கப்படும் விருந்து!
காலையில் இடியாப்பம் , புரோட்டா , இட்டிலி , ஆமை வடை ,
உளுந்த வடை , கறி சம்சா,கறி சால்னா, ஈரல் பெரட்டல் என
அமர்க்களப்படும்.அப்போது ஒரு மாப்பிள்ளைத் தோழர் கேட்பார்
பழைய கஞ்சி இருக்கா?ன்னு கல்யாண வீட்டுல பழைய கஞ்சிக்கு
எங்கே போறது?. பக்கத்து வீட்டு பாத்துமக்காவிடம் ரெண்டு
பொரட்டாவ குடுத்துட்டு பழைய கஞ்சி வாங்கிட்டு வந்து வைப்பார்கள்!
ஆனால் கேட்ட கஞ்சிய பொட்டு வுடாம குடிச்சு ஆகணும்!
அடுத்து வித விதமா வெளிநாட்டு சிகிரெட்டு தட்டில் வரும்! நம்ம
சுல்தான் காதருக்கு சுருட்டுக் குடித்தா தான் செமிக்கும்! பின்ன என்ன
பக்கீர் அப்பா கடைக்கு ஓடிப்போயி வாங்கி கொடுக்கணும்!
காலைல நல்லா புள்ளைக சாப்புட்டிருச்சுக
மதியம் என்னஎடுபடப் போகுதுன்னு பொண்ணு வீட்டுக்காரவுக
தப்புக் கணக்கு போட்டா மத்தியானம் மாப்புள்ளைய தவிர மத்த
எல்லா எஞ்சினும் புதுசு! அப்புறம் என்ன மதியச் சாப்பாடு சாப்பிட்டு
முடிச்சதும் அஸருக்கு பாங்கு சொல்லிருவாக!
21 பேருக்கு மாப்புள்ளச் சாப்பாடு போடுற
செலவும், முதல் நாள் கல்யாணச் சாப்பாடுக்கு ஆகுற செலவும்
ஒன்னுன்னு நம்ம கணிதப் புலி கலீல் சொல்றார்னா பாத்துக்குங்க!

கவிதையே தெரியுமா?

அது வேறு இது வேறு!!!!
அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய்
திரிப்பேன் என்றேன்! இன்று மனைவியான பின்
தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்! கேட்டும்
கேளாதவனாய் சென்று விட்டேன்!
அன்று நட்சத்திரத்தை ஆபரணமாகச்
செய்து அலங்கரிப்பேன் என்றேன்! இன்று
முக்கால் ரூபாய்க்கு ரிப்பன் கேட்டாள்! உன்
அப்பன் வீட்டுக் காசில் வாங்கு என்றேன்!
ஏன் இந்த மாற்றம்??!!!

வாயா இல்லை! அன்பைச் சொல்ல!
இரு வருடங்கள் விழிகளில் மட்டும் காதலித்தோம்!
இன்று மொழிகளில் காதலிக்க முடிவெடுத்து என் காதலை
வெளிப்படுத்த வாய் திறந்தேன்! அதே நேரத்தில் அவளும்
ஏதோ சொல்ல முனைந்தாள்! பெண்ணுக்கே முதல் வாய்ப்பென
அவளைப் பேச வழி விட்டேன்! நான், இறந்து விட்ட அவள் அண்ணனை
அப்படியே உறித்து வைத்தவன் போல் இருக்கிறேன் என்ற விழி நனைய வைக்கும்
செய்தியை எளிமையாய் சொன்னாள்!
தவறு அவள் மேல் அல்ல!
பாசப் பார்வையை காதல் பார்வையாய்
இரு வருடங்களும் எண்ணிய என் மேல்தான் தவறு!
ஓ! காதலரே!! இனி கண்களால் மட்டும் காதலிக்காதீர்!
உங்களுக்கு வாயா இல்லை! அன்பைச் சொல்ல!

கவர்ச்சிதான் வாழ்க்கை
பள்ளிப் பருவத்தில் இனக் கவர்ச்சி!
கல்லூரிப் பருவத்தில் மனக் கவர்ச்சி!
தந்தைப் பருவத்தில் பணக் கவர்ச்சி!
கிழப் பருவத்தில் பிணிக் கவர்ச்சி!
செத்து மடிந்ததும் புழுக் கவர்ச்சி!

முதிர் கன்னி!
மற்ற பெண்கள் தண்ணீரில் குளிக்க
இவள் மட்டும் கண்ணீரில் குளிக்கிறாள்!
கனவுகளில் மட்டும் குடித்தனம் நடத்தி
பேரன் பேத்தி எடுத்தவள் இவள்!
இன்று அவள் பேத்திக்கு வளைகாப்பு!
நிஜங்களில் அவள் வாழ இராமன்கள்
கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!
இராவணன்களாவது முன்வரட்டும்!
இல்லையேல் கனவிலேயே விதவையாகிவிடுவாள்!!

ரோஜாப் பெண்!
வாசத்தை வைத்து ரோஜாவையும்
நேசத்தை வைத்து பெண்ணையும்
நம்பிவிடாதே!ரோஜா மறுநாளும்
பெண் மறுவாரமும் வா(ட்)டி விடுவர்!

பாசி படிந்த உலகமடா!
மானே என்றேன் மயங்கவில்லை!
கனியே என்றேன் கனியவில்லை!
இசையே என்றேன் இசையவில்லை!
மலரே என்றேன் மசியவில்லை!
அழகே என்றேன் அமையவில்லை!
பொன்னே என்றேன் பொருந்தவில்லை!
அன்று ஓசி காரில்வந்தேன் பேசிவிட்டாள்!
கார் ஓசி என்றேன் ஏசிவிட்டாள்!
பாசி படிந்த உலகமடா!என வியந்தேன்!
பார்த்து போகாவிட்டால் பாதாளந்தான்!

மரணமே!நீ மறுநாள் வா!
தென்றலே நீ கொஞ்சம் ஓய்வெடு!
அதோ!என்னவள் மண்ணலந்து நடக்கிறாள்!
நிலவே!நீ ஒளிந்து கொள்!
அதோ!என் கண்ணவள் களிநடை பயில்கிறாள்!
குயிலே! நீ வெட்கப்படு!
அதோ!என் சின்னவள் சிரிக்கிறாள்!
அமுதமே!என் வாய்க்குள் போகாதே!
அதோ! என் பொன்னவள் எச்சில் உமிழ்கிறாள்!
மரணமே!நீ மறுநாள் வா!
அதோ!என் முன்னவள் என்னிடம் வருகிறாள்!

அந்தக் கல்நெஞ்சக்காரி
போலியோ சொட்டு மருந்து போட ஊரே ஓடியது! இச்செய்தி
அந்தக் கல்நெஞ்சக்காரி காதில் விழுந்தும் கண்டுகொள்ளவில்லை!
அவளது மூன்று வயது முடமான மூத்த மகன் அடம்பிடித்து அழுகிறான்
தானும் போவேன் என்று! அந்த தாய் இடுப்பில் தனது இரண்டாவது
ஊனக்குழந்தையை இடுக்கிக் கொண்டு படீரென கதவைச் சாத்துகிறாள்!
பதில் சொல்ல வேண்டும் இவள் கல்நெஞ்க்காரியா? என்று!

பாலாபிஷேகம் !!!
தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து விட்டு
பத்தடி கூட நடக்கவில்லை அந்த ரசிகன்!
பறந்து வருகிறது ஒரு தகவல்!
பால்குடி மறவா பாலகன் மகனைப் பசிப்பிணியால்
மரணம் குடித்து விட்டது என்று!
நாளை தலைவருக்கு நெய் அபிஷேகம்!!!!!!!

அபிராமம் டி - 15 கிரிக்கெட் மேட்ச் நினைவலைகள் ...!!!!

 அபிராமம் டி - 15 கிரிக்கெட் மேட்ச் நினைவலைகள் ...!!!!

.
.
.




அன்று "சாபென்ன பே பே சிக்ஸ்" என்றும் "சாட் பூட் த்ரீ" என்றும் கைகளை நீட்டி செவுச்சு கிட்டி,பம்பரம்,கம்பு தள்ளி,ஆபிதம்,மணியாபிதம்,எஸ்சார் இடி எஸ்சார் ஒதை,பெந்தா,சீச்சுக்கல்லு, தாப்புலாங்குச்சி,ஒண்ணாங்குலி, இம்புட்டு பணம் தாரேன் உடுடா துலுக்கா,என சீசனுக்கு அம்புட்டு வெளாட்டு வெளான்டாலும் இந்த கிரிக்கெட் மட்டும் எங்களை மகுடியில் மயங்கிய பாம்புகளாய் கட்டிப்போட்டது என்பது உண்மைதான்..
.



.மீராலி முஜீப் வீட்டில் வால்வு செட் ரேடியோவில் கிரிக்கெட் கமாண்டெரி கேட்கும் போது ஏக்,தோ,தீன்,சார்,பாஞ்ச்,சேர்,சாத்,ஆட்,நவ்,தஸ்,கியாரா,பாரா,தேரா இந்த நம்பர்களைக் கவனித்து குறித்து குத்துமதிப்பா ஸ்கோர் அறிந்த ஆர்வம் இன்று ஹெச்டி, 4கே டீவில ஸ்கோர் துல்லியமா பார்க்கும்போது வரவில்லை..
.
.ஊரில் மூன்று வீடுகளில் மட்டும் டீ.வி இருக்கும்..அதுவும் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மேட்ச் அதிகாலை 2.30க்கு தொடங்கும்.அதை அந்த மூன்று வீட்டாரையும் கெஞ்சிக் கூத்தாடி வாசலில் ,ஜன்னலில் நின்று முழு மேட்சையும் பார்ப்போம்..
.
எல்லோரும் இந்தியா செயிக்க ஆசப்படும்போது ஒத்த மயன் நாகூர் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் பேசுவியான்..அதுனால அவன செல்லையிலேயே சாத்தி ஓரமா நிப்பாட்டிருவம்..அவன் தனியா டூஜான்,கஸ் லோகி ,ரிச்சர்ட்ஸ் ,க்ளைவ் லாய்ட்,மால்கம் மார்சல் எனக் கூவிக்கிட்டே ஓரமா நிப்பாய்ன்...
.
.
.ரஜினி , கமல் காம்பினேசன் மாறி எங்களுக்குள் கவாஸ்கர் ,ஸ்ரீகாந்த் ரசிகர்கள்..ஓன் ஆளு அவுட்டு..இப்ப எங்க ஸ்ரீகாந்த் வெளுவ கவனி என்று சுவராசியமா போவும் மேட்ச்சு வியூகங்கள்....
.
.
.
மிசின்கார ரோடுதான் எங்களுக்கு சேப்பாக்கம் , சந்தைக்கடை ரோடே ஈடன் கார்டன்,சைக்கிள் ட்யூப்பை நறுக்கி தாளைப் பந்தாக உருட்டி சுத்தி சுத்தி ட்யூப்பை மாட்டி பந்து ரெடியான செய்தியை அலாவுதீன் (ஊதி ) சொன்னதுதான் பாக்கி மேட்ச் ஆரம்பிச்சிடும்..ட்யூப் உருவி உழுந்தா எடுத்துக் குடுக்க ஒரு பொடுசு தெர்டுமேனா நிக்கும்....
.
.
.
.கொக்க முட்டாய் கப்,கல்லமுட்டாய் கப் , 5 ரூவா கப் என கோழி கூவுனவொன்ன ஆரம்பிச்ச டோர்னமென்ட் எவனாவது ஏழ்ரைய கூட்டுற வரைக்கிம் அது பாட்டுக்கு நடக்கும்..ஏழ்ரையில ரப்பர் கார்க் பந்து துண்டு துண்டா கடித்துத் துப்பப்பட்டு முள்ளுக் காட்டுக்குள்ளாக்க எறியப்படும்..
.
.
.இப்படி பயணித்த அம்ம கிரிக்கெட்டு ஐஸ்கூலில் வெளாட ஆரம்பிச்ச போது தன் ஸ்டைலை மாற்றிக்கொண்டது...கைலி உடுத்தி வெளாடக்கூடாது..பேன்ட்,ட்ராயர் மட்டும் அணியவேண்டும்..என்று நிறம் மாறிக்கொண்டது…(கைலியை பேண்ட் மாறி கட்டி காதர்மைதீன் சாரிடம் டிக்கியில் டின் கட்டியவர்கள் ரெம்ப பேரு...அம்மளுந்தேய்ன்...)
.
.
.







.சைக்கிள் டியூப் பந்து , விக்கி பாலாகவும்,ரப்பர் கார்க் பாலாகவும் உருமாறியது...மரக்கட்டை பேட்டுகள் ரன்னர் பேட்டாகிப் போனது..ஒரே ஒரு புது பேட் மட்டும் இங்கும் அங்கும் பேட் சேஞ்ச் என்ற விளிப்பில் மாறும்..
.
.
.
.அந்த சமயம் அபிராமம் டவுன் டீம் என்ற அணியை மரியாதைக்குரிய அலியப்பா சேக் அண்ணன்,பூபதி அண்ணன்,நத்தம் தாஸ் மாமா மயன் முத்துக்குமார் அண்ணன்,அவரின் தம்பி,உறவினர் ராஜா,பன்னீர் அண்ணன்,ரமேஷ் பாபு அண்ணன்,சேமாது சிக்கந்தர் அண்ணன் நெய்னாரப்பா பேரன் மீரா,,மாப்ள கலைவாணன்,முத்து ஜாகிர்,சகுபர்,ஜெய்சங்கர் ஆகியோர் உருவாக்கினர்.முறைப்படி , விதிப்படி ஆடும் ஆட்டத்தை எங்களுக்கு காட்டினர்.. இது தான் அபிராமத்தின் முதல் கவுன்ட்டி கிரிக்கெட் டீம்...
.
.
.எங்கள் ஆர்வத்தைக் கண்ணுற்ற "கிப்ஸ்" மார்க் குழுமத்தினர் ஒரு டோர்ணமென்ட் நடத்தினர்..பல ஊர்களில் இருந்து அணியினர் அழைக்கப்பட்டனர்,,குறிப்பாக மதுரை "டி.வி.எஸ் அணி , மதுரை ப்ரீக் அணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை..
.
.
பச்சை மேட் விரிக்கப்பட்டு டோர்ணமென்ட் கோலாகலமாக நடந்தது...கமுதி பொன்னையன் சிக்கந்தர் மற்றும் மீரா பௌலிங் ஸ்பீடுகள் ஆச்சர்யமாகப் பேசப்பட்டன.முத்து ஜாகிர்,சகுபரின் பச்சை நிற ஹெல்மெட் மற்றும் பேடு செட்ஸ் வியக்க வைத்தது.. டிரிங்ஸ் ப்ரேக் விட்டு தட்டுல நன்னாரி சர்வத்தை கொண்டுவந்து குடுப்பாக...அதுனால டிரிங்ஸ் பிரேக் அப்ப கிரவுண்டுல நின்டா சர்வத்து கெடைக்கிம்ட்டு அப்ப பேட்டிங் எறங்க அம்ம சாதி சனங்க ரெம்ப ஆசைப்படுவம்....
,
.அம்பயர்கள் வேலுச்சாமி சாரும் , நண்பன் ஷேக் ஹமீதும் அசத்தினார்கள்...
.
.நத்தம் டீம் என்.சி.சி என்ற பெயரில் களமிறங்கியது. நான் லெப்ட் ஆம் பௌலர்...ஒரு மேட்சுல 4 விக்கெட் எடுத்தேன்..அப்ப அம்பயரா நின்ற வேலுச்சாமி சார்.."பீ.டி பிருடுல கிரவுண்டு பக்கமே தலை காட்டாதவய்ங்கெல்லாம் நல்லா வெளாடுறாய்ங்கடா..." அப்டின்டு சொன்னார்...அம்ம புதுப் பொண்ணு மாறி வெக்கப்பட்டம்.....புதூர் டீம் ,அகத்தாரிருப்பு டீம் என மேட்ச் களை கட்டும்..சில வேளைகளில் இரண்டு டீம்கள் ஒன்றாக மாறி அயலூர் டீமிடம் விளையாடும்..
.
.
.அபிராமம் , நத்தம் மற்றும் சுற்றுப்பட்டு ஊர்மக்களும் ஐஸ்கூலில் ஒன்று கூடி கண்டுகளித்து வீரர்களை உற்சாகப் படுத்துவர்.. பக்கத்துல குடத்துல தண்ணி இருக்கும் ( தண்ணி தவிக்கும்ல..)
.
.யார் பைனலில் கப் வாங்கினாலும் கொண்டாடி மகிழ்விப்போம்..அந்த கப்பை வெற்றி பெற்ற அணி கிப்ஸ் யூனுஸ் அண்ணன் , யூசுப் கான் அண்ணன் மற்றும் அக்பர் அண்ணன் கைகளில் இருந்து பெறும்போது நாங்கள் பெறுவது போல் பூரிப்பு அடைவோம்...
.
.ஒரு தடவை அபிராமம் நத்தம் உசுப்பு ஏத்திங் பார்முலாவ ஊஸ் பண்ணி மகாராஜா ஜுனைது அண்ணனை நாமல்லாம் டோர்ணமென்ட் நடத்த முடியுமாண்ணே அப்டின்னு ஏத்தி விட்டு அவர் ஒடனே ,நடத்திக்காட்டுவோம் மேன்...என்று ஒயிட் அண்டு ஒயிட்டில் கிரவுண்டில் இறங்கி நின்று முழு டோர்ணமென்ட்டை நடத்திக்கொடுத்து அனைவர் உள்ளங்களிலும் இடம் பிடித்தார்...நல்ல மனிதர்...
.
.
இப்படி நாங்கள் பயணித்த கிரிக்கெட் பயணம் இன்று மேட்ச் டீ.வில பார்ப்பதோடு நின்றுவிட்டது...கண்டிப்பாக அது போல் டோர்ணமென்டுகள் இனியும் நடக்க வேண்டும்...இன்பத்தில் களிக்க வேண்டும்...
.
.நீதி : எந்திர வாழ்வை சுந்தர வாழ்வாய் மாற்ற இது போன்ற நினைவூட்டல்கள் காலத்தின் கட்டாயம்...!!!
.
.அன்புடன் அ.ப.சாகுல் ஹமீது..

Google Search

Popular Posts