அகக் கண்ணால் அபிராமம் வலம் வந்த அமீர் அண்ணன் !!!!

 அகக் கண்ணால் அபிராமம் வலம் வந்த அமீர் அண்ணன் !!!!




" பேட்டையில மீனு வந்துருக்கு...வாங்குறவுக வாங்கிங்கங்க !!! சீலா மீனு நகரை மீனு , பாறை மீனு வாளை மீனு இப்புடி பல ரகத்துல மீனு கொட்டிக் கெடக்கு பேட்டையில... வாங்குறவுக வாங்கிக்கங்க...!!!!
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் அபிராமம் வீதிகளில் அஸர் நேரங்களில் இந்த கருப்பு நிலா வலம் வரும். புறக்கண்கள் புலனறியாவிட்டாலும் தன் அகக் கண்களால் கடல் மீன்கள் வருகை பற்றி நமக்கெல்லாம் வழி காட்டிய அமீர் அண்ணன்..
மஞ்சப் பையையும் , காக்கிப் பையையும் சைக்கிள் பின் சீட்டில் சின்னதா மடித்து கிளிப்பில் சொருகிக்கொண்டு சுத்துப்பட்டு கிராம சாதி சனங்க பேட்டை நோக்கி பெடலை மிதித்து பெருமையுடன் நாடி வந்து விரும்பிய மீன்களை அள்ளிச்செல்லும்..



மகரிப் நேரங்களில் அபிராமம் நத்தம் ஊடுகளில் பொறைத்தாவணி பெத்தாக்களின் அம்மி ஓசை அம்புட்டு ரோடுகளிலும் இனிய நாதமாகக் கேட்கும்.. தக்காளிப் புளிப்பில் கொழப்புனாப்புள மீனாணம் காச்சி சுடச்சுட சோத்தை ஆக்கி , உப்பு ஒரைப்போட நடுத் துண்டு மீனுகள பொரிச்சு வச்சிருவாக...நம்ம பெருசுகள்ல இருந்து எளசுக வெரைக்கிம் நொட்டாங்கைய கைய தரையில ஊண்டிக்கிட்டு சோத்தாங்கையால சல்லம் சல்லமா சாப்புட்டுட்டு ஏப்பம் விட்ட நாட்கள் இன்றும் நினைவுக்கு வருகின்றன...!!!!
நீதி : கறி , மீனுகள வள்ளு வதக்குன்டு தின்டுட்டு , கல்லுக்கெனக்கட்டா ஒடம்பை வச்சாத்தேன் கட்ட கடேசி காலத்துல தெடகாத்தரமா நோவு நொடியில்லாம ஓதித் தொழுது நோம்பு வெச்சு ஈமாங்கலிமாவோட ஒசக்க அல்லாட்ட போவலாம்..!!!

0 comments:

Google Search

Popular Posts

Blog Archive