( தொடர்ச்சி ) ....
மார்க்கக் கல்விக்கு துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் வித்திட்டதும் , உலகக் கல்விக்கு அவரது மருமகன் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் வித்திட்டதும் மறுக்கவும் மறைக்கவும் முடியாத வரலாறு...
அது போல் முஸ்லிம் செகன்டரி ஸ்கூல் கட்டிடம் உருவாக அனைவருக்கும் இலவசக் கல்வி கண் திறக்க தன் உறக்கத்தையும் மறந்து 7 வருடம் உழைத்தாரே விஜயன் முகம்மது மீரா அம்பலம் அவர்கள்... அவரும் ...
அதுபோல் பர்மா அடைப்பின் எதிரொலியாக திக்கற்ற நிலைக்கு பள்ளி நிர்வாகம் தள்ளப்பட்ட போது தாயன்புடன் தானே முன் வந்து ஆசிரியர்களின் சம்பளத்தின் பெரும் பகுதியைக் கொட்டிக் கொடுத்தாரே சங்கு வாப்பா அவர்கள்.. இவரும் ...
எந்த மாணவர்களிடமும் எந்த நன்கொடையும் வாங்காமல் இப்போது பள்ளியின் கிழக்கிலும் மேற்கிலும் உறங்கிகொண்டே நன்மை எனும் நன்கொடையை மறுமை வரை பெற்றுக்கொண்டிருக்கிறார்களே..இவர்களின் வரலாறுகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை...
பின் குறிப்பு : நான் 2013 ல் தரைக்குடியில் பணியாற்றும் போது ஒரு வயதான பாட்டி " யோவ்..வாத்தியார் சாரு...மின்ன நாங்க ஒங்க ஊரு உசுக்கோல்ல படிக்கம்போது கைலி கட மொல்லாளிய சாத்துக்குடி குடுத்தாக...லட்டு குடுத்தாக...இப்ப என்னடான்னா ஆறாப்புக்கு இம்புட்டு ஒம்பதாப்புக்கு அம்புட்டுன்டு துட்டு கேக்குறாக...ஏன் காசு பணம் மொடையாயிருச்சோ..." அப்டின்னு கேட்டுச்சு..அதுக்கு அந்த பாட்டி என்னய பிஞ்ச செருப்பெடுத்து செல்லைலயே சாத்திருக்கலாம்..
நீதி : கல்விக்கு உயிர் கொடுத்தோர் காசினியில் சாவதில்லை.
0 comments:
Post a Comment