Sons of Dubash kader sahib

( தொடர்ச்சி ) ...


நண்பர் ஒருவர் துபாஷ் காதிறு சாஹிப் பற்றி எழுதி விட்டீர்கள்..அவரது பிள்ளைகளைப் பற்றி எழுதுங்களேன் என்றார். ( நத்ததுக்கே உரித்தான உசுப்பு ஏத்தல் )
துப்பாஷிய வரலாற்றில் நான் கண்டு வியந்த ஒன்று எது என்றால் துப்பாஷ் காதிறு சாஹிப் தன் ஆண் மக்களுக்கு வைத்த பெயர்களின் ஒலிப்பு முறைகள்..( கருவாப் பய புள்ள ஒக்காந்து யோசிச்சிருக்குமோ..!!! ) 1, காசீம் , யாசீன் , 2, அஹம்மது இபுறாகீம் , முஹம்மது இபுறாகீம் , செய்யது இபுறாகீம் , 3 , எஹியா , ஜக்கரியா , ஈசா ..... ஆஹா என்ன அழகான ரைமிங் பெயர்கள்.
துபாஷ் காதிறு சாஹிப்பின் பன் முகத்தன்மைகளை ஒவ்வொரு வாரிசிலும் ஒவ்வொன்றைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள் நத்தம் அபிராமம் மக்கள்.
ஒரு வாரிசுகள் ஆன்மீகத்தையும் , அகமியத்தையும் , அலசி ஆராய்ந்து அனுபவித்து ருசித்து வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் நிர்வாகத் திறைமையை வெளிப்படுத்தி நிலச்சுவான்தார்களாகவும் , ஜமீன்தார்களாகவும் நம் மண்ணிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் சமையல் சுவையை உப்பு , புளி , மிளகாய் என ரசித்து , ருசித்து சமைத்து வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் கலையையும் , இலக்கியத்தையும் கரைத்துக் குடித்து கவி வானில் கானம் பாடி வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் தைரியத்தை மிடுக்காய் உடுப்பாய் அணிந்து காவல் துறை உயர் பதவிகளில் பணியாற்றி கௌரவித்திருக்கிறார்கள்.
அத்தனையையும் அகிலத்திற்கு காண்பித்து மறைந்த காதிறு சாஹிப் ஒரு சகாப்தமே !!!!
பின் குறிப்பு : நானும் துபாஷ் காதிறு சாஹிப் மாதிரி தலைப்பாகை கட்டலாம்னு இருக்குறதுலேயே நல்ல துண்டை எடுத்து தலைப்பா கட்டி பார்த்தேன்... ஆனா பானா என்ன முள்ளு கட்டு தூக்க போறியான்டு கேக்குது ஒசம்பாத்து நன்னி ( என்னா கிசும்பு கெய்விக்கி )

0 comments:

Google Search