முகநூல் நட்பு வட்டங்களே ( சதுரம் , செவ்வகம் , முக்கோணம் இத்தியாதி...இத்தியாதிகளே )
நீண்ட நாளுக்குப்பின் நிறைய நேரம் கிடைத்து எழுதலாம் என்று நினைத்து ரமலானில் வேண்டாம் என்று மறுத்து ஏனென்றால் நாம் ஒன்று எழுத அது ஒரு பித்னா இண்டியா லிமிட்டெட்டில் முடிந்து கண்ணிய மாதத்தை மாசு படுத்த வேண்டாம் எனப் பொறுத்து தற்போது எழுத ஆரம்பிக்கிறேன்..
ஏற்கனவே நம் நத்தம் நகர் மாந்தர்களின் சித்தம் எல்லாம் நிறைந்திருக்கும் தூயவர் ,உழைப்பால் உயர்ந்த உத்தமர் " துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் பற்றி வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறேன்..இதை ஆசிரிய நண்பர் ஜாஹீர் உசேன் அவர்கள் எம்.பில் பட்டத்திற்கு ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
தற்போது நத்தம் அபிராமம் மக்களின் கல்விக் கனவுக்கு வித்திட்ட விஜயன் எனும் வீரப் பரம்பரையில் விளைந்த புதுச்சுடர் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் அவர்களைப் பற்றி எழுத விழைகிறேன்...
இவர் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப்பின் மருமகனார் ஆவார்.. மாமனும் மருமகனும் பர்மாவில் தொழில் துறையில் கோலோச்சி இமயத்தைத் தொட்ட வரலாறு நாம் மறுக்க இயலாத வரலாற்றுக் காவியங்கள்..
விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் எனும் மீசைக்காரர் அன்று நமதூரில் கல்வி விதை விதைக்காதிருந்தால் இன்று " தோசையம்மா தோசை " என்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நான் ஒரு காட்டரபியிடம் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு ஒட்டகப்பால் டீ குடித்துக்கொண்டிருப்பேன்..
இன்று தமிழக முஸ்லீம்கள் சீதக்காதி வள்ளல் , பி.எஸ் அப்துல் ரஹ்மான் பெருந்தகை ஆகியோரைப் போற்றுவது போல் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தை இன்றளவும் மரியாதையுடன் போற்றி வருகிறார்கள் பர்மிய மக்கள்..அந்த அளவுக்கு நத்தம் அபிராமத்திற்கும் , ரெங்கூன் மக்களுக்கும் கல்வியால் , கொடைத்திறத்தால் வாரி வழங்கி விண்ணின் நட்சத்திரங்கள் நாணும் அளவுக்கு ஜொலித்தார் அந்த மீசைக்கார அன்பர்..
( தொடரும் ....)
0 comments:
Post a Comment