Honorable Khan bahdhur Medal for Dubash Kader Sahib

வரலாறு என்பது படிப்பினை கொள்வதற்கும் , பெருமை கொள்வதற்கும் நம் முன்னோர்களால் எழுதப்பட்டு பின்னாளில் சந்ததியினர் அறிவதற்கும் , உணர்வதற்கும் , உதவும் கருவியாகும்.


அந்த வகையில் யாரும் ஆவணப்படுத்தாத , பதிவு செய்து வைக்காத நத்தத்து முண்டாசுக்காரரின் , மீசைக்காரரின் வரலாற்றை முக நூலில் பதிவு செய்து வருகிறேன்.. இதை பிடித்தால் முகநூலில் படிப்போம்..விருப்பமில்லை எனில் பக்கத்தைத் தள்ளிவிட்டுட்டு புள்ள குட்டிகள படிக்க வெக்கிற வேலைகள பாப்போம் . அதானே உலக வழக்கம்..
யாரு என்ன சொன்னாலும் துபாஷ் காதர் அவர்களின் , அவர் பிள்ளைகளின் , விஜயன் அப்துல் ரகிமான் அவர்களின் , அவர் பிள்ளைகளின் ராயல் லுக் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க...என்னைப் பொருத்தவரை அவர்களின் நுனி நாக்கு இங்கிலீசும் , ஸ்டைலான தோரணையும் பெரியவர்களிடம் கேட்டறிந்து புகைப்படங்களில் பார்த்து , புலகாங்கிதம் அடைந்து சேகரித்து வந்த பொக்கிஷங்கள் இவை.
நத்தத்து தலைப்பாக்கட்டி துபாஷ் ( இரு பாஷைகளில் பின்னிப் பெடலெடுப்பவர் ) அவர்களின் பேச்சில் மயங்கிய ஆங்கிலேயர்கள், அவருக்கு கான் பகதூர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.


கான் பகதூர் (Khan bahadur ') என்பது பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டமாகும். இசுலாமிய, பார்சி மக்களுக்கு கான் பகதூர் என்று வழங்கப்பட்டது. சிலநேரங்களில் ராய் சாகிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.



இது வங்காளத்தில் ராவ் பகதூர் என வழங்கப்பட்டது. "ராவ்" என்ற சொல் "இளவரசர்" என்பதையும் "பகதூர்" என்பது "மாண்பிற்குரியவர்" என்றும் பொருள்படும். பிரித்தானிய இந்தியாவில் இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பதக்கமொன்றுடன் வழங்கப்பட்ட இப்பட்டம் தற்கால பத்மஸ்ரீ போன்ற குடியியல் விருதுகளுக்கு இணையானது.


அது போக அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டி என்ற அமைப்பு ஆரம்பித்த ஆண்டு கி.பி 1663 முதல் இன்று வரை உலகத்தில் வெறும் 8000 தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கிய F R S ( Fellowship of the Royal Society ) என்ற பட்டத்தை 18 ஆம் நூற்றாண்டில் இந்த குக்கிராமத்து மனிதர் துபாஷ் காதிறு சாஹிப் அவர்கள் பெற்றது நமக்கு பெருமைதானே.. ( இந்த விருது பெற்றவர்களில் சர் ஐசக் நியூட்டன் மற்றும் மனோவியல் நிபுணர் ஸ்டீவ் ஹாக்கின்ஸ் குறிப்பிடத்தக்கவர்கள் )
இப்படி வியாபாரத்திலும் , பேச்சுத் திறமையிலும் புகழின் உச்சிக்குச் சென்றவர்களை பற்றி பேசி எழுதி பெருமை கொள்வோம் ( நூத்த பத்த செலவானாலும் பரால்ல..)
( இதுவே நிறைய வந்ததால் விஜயன் அம்பலமும் , டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்களும் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்.... )
பின் குறிப்பு : ஒசம்பாத்து நன்னி இது பற்றி...... " அடேய்...ஆனா பானா பேரப்புள்ளை...அம்ம துப்பாசு நன்னாவயும் , வெசயன் நன்னாவயும் பத்தி சுழிய அடக்கி குத்த வெச்சு , பேச்சு புக்குல எழுதுடா,,, அத பாத்து பரிவிச்சு சூதானமா அம்ம பய புள்ளைக கேக்கட்டும்..

0 comments:

Google Search