Honorable Khan bahdhur Medal for Dubash Kader Sahib

வரலாறு என்பது படிப்பினை கொள்வதற்கும் , பெருமை கொள்வதற்கும் நம் முன்னோர்களால் எழுதப்பட்டு பின்னாளில் சந்ததியினர் அறிவதற்கும் , உணர்வதற்கும் , உதவும் கருவியாகும்.


அந்த வகையில் யாரும் ஆவணப்படுத்தாத , பதிவு செய்து வைக்காத நத்தத்து முண்டாசுக்காரரின் , மீசைக்காரரின் வரலாற்றை முக நூலில் பதிவு செய்து வருகிறேன்.. இதை பிடித்தால் முகநூலில் படிப்போம்..விருப்பமில்லை எனில் பக்கத்தைத் தள்ளிவிட்டுட்டு புள்ள குட்டிகள படிக்க வெக்கிற வேலைகள பாப்போம் . அதானே உலக வழக்கம்..
யாரு என்ன சொன்னாலும் துபாஷ் காதர் அவர்களின் , அவர் பிள்ளைகளின் , விஜயன் அப்துல் ரகிமான் அவர்களின் , அவர் பிள்ளைகளின் ராயல் லுக் எனக்கு ரொம்ப பிடிக்குமுங்க...என்னைப் பொருத்தவரை அவர்களின் நுனி நாக்கு இங்கிலீசும் , ஸ்டைலான தோரணையும் பெரியவர்களிடம் கேட்டறிந்து புகைப்படங்களில் பார்த்து , புலகாங்கிதம் அடைந்து சேகரித்து வந்த பொக்கிஷங்கள் இவை.
நத்தத்து தலைப்பாக்கட்டி துபாஷ் ( இரு பாஷைகளில் பின்னிப் பெடலெடுப்பவர் ) அவர்களின் பேச்சில் மயங்கிய ஆங்கிலேயர்கள், அவருக்கு கான் பகதூர் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.


கான் பகதூர் (Khan bahadur ') என்பது பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டமாகும். இசுலாமிய, பார்சி மக்களுக்கு கான் பகதூர் என்று வழங்கப்பட்டது. சிலநேரங்களில் ராய் சாகிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.



இது வங்காளத்தில் ராவ் பகதூர் என வழங்கப்பட்டது. "ராவ்" என்ற சொல் "இளவரசர்" என்பதையும் "பகதூர்" என்பது "மாண்பிற்குரியவர்" என்றும் பொருள்படும். பிரித்தானிய இந்தியாவில் இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பதக்கமொன்றுடன் வழங்கப்பட்ட இப்பட்டம் தற்கால பத்மஸ்ரீ போன்ற குடியியல் விருதுகளுக்கு இணையானது.


அது போக அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டி என்ற அமைப்பு ஆரம்பித்த ஆண்டு கி.பி 1663 முதல் இன்று வரை உலகத்தில் வெறும் 8000 தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கிய F R S ( Fellowship of the Royal Society ) என்ற பட்டத்தை 18 ஆம் நூற்றாண்டில் இந்த குக்கிராமத்து மனிதர் துபாஷ் காதிறு சாஹிப் அவர்கள் பெற்றது நமக்கு பெருமைதானே.. ( இந்த விருது பெற்றவர்களில் சர் ஐசக் நியூட்டன் மற்றும் மனோவியல் நிபுணர் ஸ்டீவ் ஹாக்கின்ஸ் குறிப்பிடத்தக்கவர்கள் )
இப்படி வியாபாரத்திலும் , பேச்சுத் திறமையிலும் புகழின் உச்சிக்குச் சென்றவர்களை பற்றி பேசி எழுதி பெருமை கொள்வோம் ( நூத்த பத்த செலவானாலும் பரால்ல..)
( இதுவே நிறைய வந்ததால் விஜயன் அம்பலமும் , டாக்டர் ஜாஹீர் ஹுசைன் அவர்களும் அடுத்த பதிவில் இன்ஷா அல்லாஹ்.... )
பின் குறிப்பு : ஒசம்பாத்து நன்னி இது பற்றி...... " அடேய்...ஆனா பானா பேரப்புள்ளை...அம்ம துப்பாசு நன்னாவயும் , வெசயன் நன்னாவயும் பத்தி சுழிய அடக்கி குத்த வெச்சு , பேச்சு புக்குல எழுதுடா,,, அத பாத்து பரிவிச்சு சூதானமா அம்ம பய புள்ளைக கேக்கட்டும்..

A.P.Mohamed Shareef and family

ஆனா பானா அரைக்கஞ்சம்!!
மூனா பானா முழுக்கஞ்சம்!!
பெரிய ஊட்டு பிரியாணி அம்புட்டையும் பந்தில வெக்கிறீக..அம்ம ஊட்டு கட்டுச் சோத்தை அவுக்க மாட்டீங்குறியளே மாமூன்டு என் மச்சாய்ன் சுபுகானி மயன் இன்பாக்ஸ்ல வந்து கேட்டாப்புள ( ஊர்க்காட்டு பக்கம் வந்தா அம்மளுக்கு ஒரு கோடாலி சாப்பும் , பச்சைத் தைலமும் கெடைக்கும்ல ) சரி போட்டு உட்டுட்டு போவம்னு இந்த பதிவை போடுறேன்...


வியாபாரத்தில் நாணயம் எப்படி முக்கியமோ அதுபோல் நா நயம் ( பேச்சுத் திறன் ) ரொம்ப முக்கியம்..தங்கம் பொன்னு யாவாரத்தில் தன் மின்னும் தங்க பற்களால் சிரித்துப் பேசியே சுத்துப்பட்டு ஊர்களையும் வளைத்துப் போட்ட அ.ப.ச ( அ.ப.சரிபு ) அவர்கள் பொ.ப.ச வாக ( பின் குறிப்பில் சொல்லப்படும் ) மாறி பல சாதனைகள் புரிந்துள்ளார்.


நாலு கடைக்கி போங்க அப்புறம் அம்ம கடைக்கி வாங்க...அப்டின்டு லலிதா ஜுவல்லர்ஸ் ஓனர் அய்யா இவுக வித்தியாசமா விளம்பரம் பண்ணது மாறி அப்பவே அ.ப.ச ( அ.ப.சரிபு ) என்ற பொ.ப.ச ( பின் குறிப்பில் சொல்லுவம் ) விளம்பரம் பண்ணிருக்காப்ள..அதை இப்பதிவின் படங்களில் பாருங்கள்... வியாபாரத்தில் சைக்காலஜி எப்புடி ஒர்க் அவுட் ஆகுதுன்னு புரியும்...
பின் குறிப்பு : பொ.ப.ச என்றால் "பொண்டாட்டிக்கு பயந்தோர் சங்கம் " எங்களுக்கு ஊரு பூறா கெளைதேன்...
எல்லாம் செரி!! ஆனா பானா அரைக்கஞ்சம்!! மூனா பானா முழுக்கஞ்சம்!! இதுக்கு வெளக்கம் சொல்டியோவ் அப்டீன்னு ஒரு மைன்ட் வாய்ஸ் ஒண்ணு கிளியரா கேக்குது!!
அதாகப்பட்டது கஞ்சம் என்றால் தாமரை . தாமரையின் குணாதிசயங்களில் ஒன்று குளிர்ச்சியூட்டுவது , மற்றொன்று சாந்தப்படுத்துவது இதைக் கருத்தில் கொண்டு நாம் இந்த பழமொழியை ஆராய்வோமெனில் ஆனா பானா அரைக்கஞ்சம் என்றால் உங்கள் மனதில் உள்ள சுமைகளை இறக்கி , கூல் பண்ணி , சாந்தப்படுத்திய தாமரையாக உங்களை அரை மனதோடு அனுப்புவார் ஆனா பானா !!
என்பதே இதற்கு தெள்ளியதோர் உதாரணமாம்!! இதே விதியை மூனா பானா அவர்களுக்கு அப்ளை பண்ணி அறியவும்!!
ஆதாரம் : கஞ்சம் என்பதை தமிழ் அகராதியைப்பார்த்தறிந்த நிழற்படம் பிற்சேர்க்கையில்..


நன்றியுடன் !!!!
அரைக்கஞ்சத்தின் அன்புப்பேரன்!!!
அ.ப.சா ( அறவே பயப்படாத சாகுல் )

Sons of Dubash kader sahib

( தொடர்ச்சி ) ...


நண்பர் ஒருவர் துபாஷ் காதிறு சாஹிப் பற்றி எழுதி விட்டீர்கள்..அவரது பிள்ளைகளைப் பற்றி எழுதுங்களேன் என்றார். ( நத்ததுக்கே உரித்தான உசுப்பு ஏத்தல் )
துப்பாஷிய வரலாற்றில் நான் கண்டு வியந்த ஒன்று எது என்றால் துப்பாஷ் காதிறு சாஹிப் தன் ஆண் மக்களுக்கு வைத்த பெயர்களின் ஒலிப்பு முறைகள்..( கருவாப் பய புள்ள ஒக்காந்து யோசிச்சிருக்குமோ..!!! ) 1, காசீம் , யாசீன் , 2, அஹம்மது இபுறாகீம் , முஹம்மது இபுறாகீம் , செய்யது இபுறாகீம் , 3 , எஹியா , ஜக்கரியா , ஈசா ..... ஆஹா என்ன அழகான ரைமிங் பெயர்கள்.
துபாஷ் காதிறு சாஹிப்பின் பன் முகத்தன்மைகளை ஒவ்வொரு வாரிசிலும் ஒவ்வொன்றைப் பார்த்து ஆச்சரியப் பட்டிருக்கிறார்கள் நத்தம் அபிராமம் மக்கள்.
ஒரு வாரிசுகள் ஆன்மீகத்தையும் , அகமியத்தையும் , அலசி ஆராய்ந்து அனுபவித்து ருசித்து வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் நிர்வாகத் திறைமையை வெளிப்படுத்தி நிலச்சுவான்தார்களாகவும் , ஜமீன்தார்களாகவும் நம் மண்ணிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் சமையல் சுவையை உப்பு , புளி , மிளகாய் என ரசித்து , ருசித்து சமைத்து வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் கலையையும் , இலக்கியத்தையும் கரைத்துக் குடித்து கவி வானில் கானம் பாடி வந்திருக்கிறார்கள்.
ஒரு வாரிசுகள் தைரியத்தை மிடுக்காய் உடுப்பாய் அணிந்து காவல் துறை உயர் பதவிகளில் பணியாற்றி கௌரவித்திருக்கிறார்கள்.
அத்தனையையும் அகிலத்திற்கு காண்பித்து மறைந்த காதிறு சாஹிப் ஒரு சகாப்தமே !!!!
பின் குறிப்பு : நானும் துபாஷ் காதிறு சாஹிப் மாதிரி தலைப்பாகை கட்டலாம்னு இருக்குறதுலேயே நல்ல துண்டை எடுத்து தலைப்பா கட்டி பார்த்தேன்... ஆனா பானா என்ன முள்ளு கட்டு தூக்க போறியான்டு கேக்குது ஒசம்பாத்து நன்னி ( என்னா கிசும்பு கெய்விக்கி )

vijayan abdul rahiman ambalam

முகநூல் நட்பு வட்டங்களே ( சதுரம் , செவ்வகம் , முக்கோணம் இத்தியாதி...இத்தியாதிகளே )


நீண்ட நாளுக்குப்பின் நிறைய நேரம் கிடைத்து எழுதலாம் என்று நினைத்து ரமலானில் வேண்டாம் என்று மறுத்து ஏனென்றால் நாம் ஒன்று எழுத அது ஒரு பித்னா இண்டியா லிமிட்டெட்டில் முடிந்து கண்ணிய மாதத்தை மாசு படுத்த வேண்டாம் எனப் பொறுத்து தற்போது எழுத ஆரம்பிக்கிறேன்..
ஏற்கனவே நம் நத்தம் நகர் மாந்தர்களின் சித்தம் எல்லாம் நிறைந்திருக்கும் தூயவர் ,உழைப்பால் உயர்ந்த உத்தமர் " துபாஷ் அப்துல் காதிறு சாஹிப் பற்றி வலைப்பக்கத்தில் எழுதி இருக்கிறேன்..இதை ஆசிரிய நண்பர் ஜாஹீர் உசேன் அவர்கள் எம்.பில் பட்டத்திற்கு ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

தற்போது நத்தம் அபிராமம் மக்களின் கல்விக் கனவுக்கு வித்திட்ட விஜயன் எனும் வீரப் பரம்பரையில் விளைந்த புதுச்சுடர் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் அவர்களைப் பற்றி எழுத விழைகிறேன்...


இவர் துபாஷ் அப்துல் காதிறு சாஹிப்பின் மருமகனார் ஆவார்.. மாமனும் மருமகனும் பர்மாவில் தொழில் துறையில் கோலோச்சி இமயத்தைத் தொட்ட வரலாறு நாம் மறுக்க இயலாத வரலாற்றுக் காவியங்கள்..


விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலம் எனும் மீசைக்காரர் அன்று நமதூரில் கல்வி விதை விதைக்காதிருந்தால் இன்று " தோசையம்மா தோசை " என்று பாடம் நடத்திக்கொண்டிருக்கும் நான் ஒரு காட்டரபியிடம் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு ஒட்டகப்பால் டீ குடித்துக்கொண்டிருப்பேன்..


இன்று தமிழக முஸ்லீம்கள் சீதக்காதி வள்ளல் , பி.எஸ் அப்துல் ரஹ்மான் பெருந்தகை ஆகியோரைப் போற்றுவது போல் விஜயன் அப்துல் ரஹிமான் அம்பலத்தை இன்றளவும் மரியாதையுடன் போற்றி வருகிறார்கள் பர்மிய மக்கள்..அந்த அளவுக்கு நத்தம் அபிராமத்திற்கும் , ரெங்கூன் மக்களுக்கும் கல்வியால் , கொடைத்திறத்தால் வாரி வழங்கி விண்ணின் நட்சத்திரங்கள் நாணும் அளவுக்கு ஜொலித்தார் அந்த மீசைக்கார அன்பர்..





( தொடரும் ....)

Google Search

Popular Posts