பேட்டை அண்ணன் மற்றும் லொள்ளு மாமு..

MUSLIM WELFARE ASSOCIATION NATHAM


அன்று காக்கி ட்ரவுசரை உடுத்திக் கொண்டு அல்லது
கைலியை கையில் பிடித்துக் கொண்டு(கட்டக்கூடாது)
கல்மண்டபத்திற்கு வந்தால் அங்கு பேட்டை அண்ணன்
ரெடியாக இருப்பார்.அவரிடம் 6 வயசு பொடுசு ' என்ன
மம்மது மைதீன் சாப்ட்டயா? என்று கேட்கும்'
உடனே அவர் எவய்ன் அவய்ன் புத்தி இருக்கா மதி
இருக்கா? என்பார்.நாமெல்லாம் சின்ன கிளாசில் டீ
குடிப்போம் ஆனால் பேட்டை அண்ணன் பெரிய
சட்டியில் தான் டீ குடிப்பார்.அவருக்கு ஞாயிறு முதல்
சனி வரை ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சோறு வரும்.
அதை லுஹரில் ஆரம்பித்து அஸர் வரை சாப்பிடுவார்.
அடுத்து அடுத்தநாள் டீதான்.
அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள்

எந்த மடப்பய? , பேதில்ல போயிருவ, கொல்லையில போயிருவ,
அரிசிப்பல்லு அவுசாரி, தெத்துப்பல்லு தே.........யா, லொங்காரிச்
சிருக்கி மயன், குச்சிக்காலி மயன், குல்லி மயன், சமுக்காரம்(சோப்பு)
மடார்னு உளுந்திருவ, திடீர்னு உளுந்திருவ, ஞாயத்துக் கெளம
ஒன்னு மைதினாண்டவுகளே நீங்க கேளுங்க, கடைசியா
முடியாத பட்சத்தில அவர் "கொல்றான்" "கொல்றான்" என்று
மூச்சு விடாமல் கத்துவார்.
உடனே அவரை விட்டு விலகிய குழு லொள்ளு
மாமுவிடம் 'வெள்ளக்கோழி வெள்ளமுட்ட விட்டா கருப்புக் கோழி
என்ன முட்ட விடும்?னு அறிவியல்பூர்வமான கேள்விய கேட்கும்.
அதற்கு அவர் நொப்பன் முட்ட விடும் என்பார்.
இவை அன்றைய கோணத்தில் சிரிப்பாக
இருந்தாலும் இன்று நினைத்தால் மனம் கனக்கிறது.அவர்களிடம்
வாங்கிய திட்டுக்களுக்கு பிரயாச்சித்தமாக ஏதாவது செய்ய
வேண்டும் என்று நாம் நினைத்தால் அவர்களுடைய மறுமைக்கு துவா
செய்வோம்!!
MUSLIM WELFARE ASSOCIATION

சங்கத்து பிள்ளைகள்


முஸ்லீம் பொது நல ஊழியர் மன்றம் என்ற மாபெரும் அமைப்பை நமது முன்னோர்
உருவாக்கினர். அதன் முக்கிய பணியாக ரமலான் இரவுகளில் ஷஹர் நேரத்தில்
நத்தம் வீதிகளில் பைத் ஓதி மக்களை விழித்தெழ வைப்பது,கல்யாணம் நடைபெறும்
போது மாப்பிள்ளையை பைத் ஓதி மணப் பெண் வீட்டுக்கு அழைத்துச் செல்வது,ஊரில்
நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதனைச் சிறப்பித்தல்
போன்றவை ஆகும். பாரம்பரியம் மிக்க இம்மன்றத்தின் அனுபவங்களை மற்ற
வாரங்களில் பார்ப்போம்!........

சங்கத்து பிள்ளைகள்

சங்கத்துப் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை வீட்டில் பெருத்த வரவேற்பு
இருக்கும்.சங்கத்து புள்ளைக வந்துட்டாகளா? சங்கத்து மாலை ஏறினா
தான் மத்த மாலை ஏறனும் என்று ஏகத்துக்கு மரியாதைதான்.
மாப்பிள்ளை சோவடிப்பு,பைத் பாடி பொண்ணு வீட்டுக்கு அழைத்து
வருவது பொண் வீட்டில் பத்து நிமிசம் சோபனப்பாடல் பாடுதல்
என சோர்வான புள்ளைகளுக்கு அடுத்த நாள் செம்ம அதிர்ஷ்டம்.
ஆம்! மாப்பிள்ளை சாப்பாடு.

வசதிக்கேற்ப மாப்பிள்ளைத் தோழர்களை 11, 21 31, 41, 51,
என அழைத்து மாப்பிள்ளையுடன் சேர்த்து அளிக்கப்படும் விருந்து!
காலையில் இடியாப்பம் , புரோட்டா , இட்டிலி , ஆமை வடை ,
உளுந்த வடை , கறி சம்சா,கறி சால்னா, ஈரல் பெரட்டல் என
அமர்க்களப்படும்.அப்போது ஒரு மாப்பிள்ளைத் தோழர் கேட்பார்
பழைய கஞ்சி இருக்கா?ன்னு கல்யாண வீட்டுல பழைய கஞ்சிக்கு
எங்கே போறது?. பக்கத்து வீட்டு பாத்துமக்காவிடம் ரெண்டு
பொரட்டாவ குடுத்துட்டு பழைய கஞ்சி வாங்கிட்டு வந்து வைப்பார்கள்!
ஆனால் கேட்ட கஞ்சிய பொட்டு வுடாம குடிச்சு ஆகணும்!
அடுத்து வித விதமா வெளிநாட்டு சிகிரெட்டு தட்டில் வரும்! நம்ம
சுல்தான் காதருக்கு சுருட்டுக் குடித்தா தான் செமிக்கும்! பின்ன என்ன
பக்கீர் அப்பா கடைக்கு ஓடிப்போயி வாங்கி கொடுக்கணும்!
காலைல நல்லா புள்ளைக சாப்புட்டிருச்சுக
மதியம் என்னஎடுபடப் போகுதுன்னு பொண்ணு வீட்டுக்காரவுக
தப்புக் கணக்கு போட்டா மத்தியானம் மாப்புள்ளைய தவிர மத்த
எல்லா எஞ்சினும் புதுசு! அப்புறம் என்ன மதியச் சாப்பாடு சாப்பிட்டு
முடிச்சதும் அஸருக்கு பாங்கு சொல்லிருவாக!
21 பேருக்கு மாப்புள்ளச் சாப்பாடு போடுற
செலவும், முதல் நாள் கல்யாணச் சாப்பாடுக்கு ஆகுற செலவும்
ஒன்னுன்னு நம்ம கணிதப் புலி கலீல் சொல்றார்னா பாத்துக்குங்க!

கவிதையே தெரியுமா?

அது வேறு இது வேறு!!!!
அன்று காதலிக்கும் போது மணலைக் கயிறாய்
திரிப்பேன் என்றேன்! இன்று மனைவியான பின்
தொட்டில் கட்ட கயிறு கேட்டாள்! கேட்டும்
கேளாதவனாய் சென்று விட்டேன்!
அன்று நட்சத்திரத்தை ஆபரணமாகச்
செய்து அலங்கரிப்பேன் என்றேன்! இன்று
முக்கால் ரூபாய்க்கு ரிப்பன் கேட்டாள்! உன்
அப்பன் வீட்டுக் காசில் வாங்கு என்றேன்!
ஏன் இந்த மாற்றம்??!!!

வாயா இல்லை! அன்பைச் சொல்ல!
இரு வருடங்கள் விழிகளில் மட்டும் காதலித்தோம்!
இன்று மொழிகளில் காதலிக்க முடிவெடுத்து என் காதலை
வெளிப்படுத்த வாய் திறந்தேன்! அதே நேரத்தில் அவளும்
ஏதோ சொல்ல முனைந்தாள்! பெண்ணுக்கே முதல் வாய்ப்பென
அவளைப் பேச வழி விட்டேன்! நான், இறந்து விட்ட அவள் அண்ணனை
அப்படியே உறித்து வைத்தவன் போல் இருக்கிறேன் என்ற விழி நனைய வைக்கும்
செய்தியை எளிமையாய் சொன்னாள்!
தவறு அவள் மேல் அல்ல!
பாசப் பார்வையை காதல் பார்வையாய்
இரு வருடங்களும் எண்ணிய என் மேல்தான் தவறு!
ஓ! காதலரே!! இனி கண்களால் மட்டும் காதலிக்காதீர்!
உங்களுக்கு வாயா இல்லை! அன்பைச் சொல்ல!

கவர்ச்சிதான் வாழ்க்கை
பள்ளிப் பருவத்தில் இனக் கவர்ச்சி!
கல்லூரிப் பருவத்தில் மனக் கவர்ச்சி!
தந்தைப் பருவத்தில் பணக் கவர்ச்சி!
கிழப் பருவத்தில் பிணிக் கவர்ச்சி!
செத்து மடிந்ததும் புழுக் கவர்ச்சி!

முதிர் கன்னி!
மற்ற பெண்கள் தண்ணீரில் குளிக்க
இவள் மட்டும் கண்ணீரில் குளிக்கிறாள்!
கனவுகளில் மட்டும் குடித்தனம் நடத்தி
பேரன் பேத்தி எடுத்தவள் இவள்!
இன்று அவள் பேத்திக்கு வளைகாப்பு!
நிஜங்களில் அவள் வாழ இராமன்கள்
கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!
இராவணன்களாவது முன்வரட்டும்!
இல்லையேல் கனவிலேயே விதவையாகிவிடுவாள்!!

ரோஜாப் பெண்!
வாசத்தை வைத்து ரோஜாவையும்
நேசத்தை வைத்து பெண்ணையும்
நம்பிவிடாதே!ரோஜா மறுநாளும்
பெண் மறுவாரமும் வா(ட்)டி விடுவர்!

பாசி படிந்த உலகமடா!
மானே என்றேன் மயங்கவில்லை!
கனியே என்றேன் கனியவில்லை!
இசையே என்றேன் இசையவில்லை!
மலரே என்றேன் மசியவில்லை!
அழகே என்றேன் அமையவில்லை!
பொன்னே என்றேன் பொருந்தவில்லை!
அன்று ஓசி காரில்வந்தேன் பேசிவிட்டாள்!
கார் ஓசி என்றேன் ஏசிவிட்டாள்!
பாசி படிந்த உலகமடா!என வியந்தேன்!
பார்த்து போகாவிட்டால் பாதாளந்தான்!

மரணமே!நீ மறுநாள் வா!
தென்றலே நீ கொஞ்சம் ஓய்வெடு!
அதோ!என்னவள் மண்ணலந்து நடக்கிறாள்!
நிலவே!நீ ஒளிந்து கொள்!
அதோ!என் கண்ணவள் களிநடை பயில்கிறாள்!
குயிலே! நீ வெட்கப்படு!
அதோ!என் சின்னவள் சிரிக்கிறாள்!
அமுதமே!என் வாய்க்குள் போகாதே!
அதோ! என் பொன்னவள் எச்சில் உமிழ்கிறாள்!
மரணமே!நீ மறுநாள் வா!
அதோ!என் முன்னவள் என்னிடம் வருகிறாள்!

அந்தக் கல்நெஞ்சக்காரி
போலியோ சொட்டு மருந்து போட ஊரே ஓடியது! இச்செய்தி
அந்தக் கல்நெஞ்சக்காரி காதில் விழுந்தும் கண்டுகொள்ளவில்லை!
அவளது மூன்று வயது முடமான மூத்த மகன் அடம்பிடித்து அழுகிறான்
தானும் போவேன் என்று! அந்த தாய் இடுப்பில் தனது இரண்டாவது
ஊனக்குழந்தையை இடுக்கிக் கொண்டு படீரென கதவைச் சாத்துகிறாள்!
பதில் சொல்ல வேண்டும் இவள் கல்நெஞ்க்காரியா? என்று!

பாலாபிஷேகம் !!!
தலைவர் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து விட்டு
பத்தடி கூட நடக்கவில்லை அந்த ரசிகன்!
பறந்து வருகிறது ஒரு தகவல்!
பால்குடி மறவா பாலகன் மகனைப் பசிப்பிணியால்
மரணம் குடித்து விட்டது என்று!
நாளை தலைவருக்கு நெய் அபிஷேகம்!!!!!!!

Google Search

Popular Posts